எங்கள் குடும்பத்திற்கு பக்கபலமாகவும் உறுதுணையாகவும் நின்ற மத்திய, மாநில அரசுகளுக்கு நன்றி என நடிகர் விவேக்கின் மனைவி தெரிவித்தார்.
இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
என் கணவரை இழந்திருக்கும் இந்த நேரத்தில் பக்கபலமாகவும் உறுதுணையாகவும் நின்ற மத்திய, மாநில அரசுகளுக்கு நன்றி. அரசு மரியாதையுடன் அவரது இறுதிச்சடங்கு நடைபெற்றதற்கு நாங்கள் வேண்டும் நன்றியுடன் இருப்போம். இது அவருக்கு மிகப்பெரிய கெளரவம்.
அதேபோன்று காவல்துறை, ஊடகத்துறையில் உள்ள சகோதரர்களுக்கு நன்றி. உலகம் முழுவதுமுள்ள அவருடைய கோடானகோடி ரசிகர்களுக்கு நன்றி என்று தெரிவித்தார்.