தமிழ்நாடு

தலைவாசலில் நகைக் கடையில் திருட்டு

DIN


தலைவாசல் மும்முடியில் நகைக்கடையில்  7 கிலோ வெள்ளி பொருள்கள் உள்பட ரூ 4 லட்சம் மதிப்புள்ள பொருள்களை திருடிச் சென்றவர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.

சேலம் மாவட்டம், தலைவாசல் மும்முடியில் ஆறுமுகம் மகன் முத்துராஜ்(34) என்பவர் ஆரா ஜீவல்லர்ஸ் என்ற கடையை நடத்தி வருகிறார். சனிக்கிழமை கடையை மூடிவிட்டு வீட்டிற்கு சென்றார். நள்ளிரவில் மர்ம நபர்கள் கடையின் ஷட்டரை உடைத்து கடையில் இருந்த வெள்ளி பொருள்கள் 7 கிலோ, ரொக்கம், கேமிரா, சிஸ்டம் என ரூ 4 லட்சம் மதிப்புள்ள பொருள்களை திருடிச் சென்றுள்ளனர்.

இது குறித்து தகவல் அறிந்த ஆத்தூர் காவல்துணைக்கண்காணிப்பாளர் ஏ.இம்மானுவேல் ஞானசேகரன் தலைமையிலான போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்றைய ராசி பலன்கள்!

பாஜகவை மக்கள் மன்னிக்க மாட்டாா்கள்: மம்தா பானா்ஜி

இன்று உங்கள் ராசிக்கு எப்படி?

திரவ நைட்ரஜன் கலந்த உணவை தவிா்க்க பிரேமலதா வேண்டுகோள்

அரசு விளையாட்டு விடுதிகளில் சேர மே 5-க்குள் விண்ணப்பிக்கலாம்

SCROLL FOR NEXT