தமிழ்நாடு

பல்லடம் அதிமுக வேட்பாளர் எம்.எஸ்.எம்.ஆனந்தனுக்கு கரோனா

DIN



திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் பல்லடம் சட்டப்பேரவைத் தொகுதி அதிமுக வேட்பாளருக்கு கரோனா நோய்த்தொற்று சனிக்கிழமை உறுதி செய்யப்பட்டது.

திருப்பூர் மாவட்டம், பல்லடம் சட்டப்பேரவைத் தொகுதியில் அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் (64), போட்டியிட்டார். இவர் சட்டப்பேரவைத் தேர்தலின் போது, தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டிருந்தார். இந்த நிலையில் கடந்த ஏப்ரல் 6 ஆம் தேதி வாக்குப்பதிவு நிறைவடைந்த நிலையில் கடந்த 2 நாள்காளக காய்ச்சல், சளியால் அவதிப்பட்டுள்ளார்.  

இதையடுத்து, கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் பரிசோதனை மேற்கொண்டார். இதில், அவருக்கு கரோனா நோய்த்தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டதைத் தொடர்ந்து அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். 

மேலும், அவருடன் தொடர்பில் இருந்த நபர்களுக்கும் மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கேரளத்தில் 12.30 மணி நிலவரப்படி 33.45% வாக்குகள் பதிவு!

2-ம் கட்ட மக்களவைத் தேர்தல்: 11 மணி நிலவரம்

பயமோ, வருத்தமோ இல்லாமல் கட்டப்பஞ்சாயத்து நடக்கிறது: விஷாலின் அதிரடி பதிவு!

மக்களவை 2-ம் கட்ட தேர்தல்: கவன ஈர்ப்புச் சித்திரம் வெளியிட்ட கூகுள்!

இரு பைக்குகள் நேருக்கு நேர் மோதி விபத்து: பாஜக நிர்வாகி பலி

SCROLL FOR NEXT