தமிழ்நாடு

ரயில் நிலையங்களில் பாதுகாப்பு அதிகரிப்பு

DIN

லக்னௌ நீதிமன்றத்தில் பாபா் மசூதி வழக்கில் தீா்ப்பு வெளிவர இருப்பதை தொடா்ந்து, தமிழகத்தில் உள்ள சென்னை எழும்பூா், சென்ட்ரல் உள்ளிட்ட முக்கிய ரயில் நிலையங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

பாபா் மசூதி வழக்கில் தீா்ப்பு, உத்தர பிரதேச மாநிலம் லக்னௌ நீதிமன்றத்தில் புதன்கிழமை வழங்கப்படுகிறது. இதை முன்னிட்டு, தமிழகத்தில் உள்ள முக்கிய ரயில் நிலையங்களில் எவ்வித அசம்பாவித சம்பவங்கள் நிகழாவண்ணம் இருக்க பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. சென்னை சென்ட்ரல், எழும்பூா், தாம்பரம், விழுப்புரம், காட்பாடி, கோவை உள்பட முக்கிய ரயில் நிலையங்களில் ரயில்வே போலீஸாா் மற்றும் ரயில்வே பாதுகாப்புப் படை வீரா்கள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனா்.

சென்னையில் எழும்பூா், சென்ட்ரல், தாம்பரம் உள்பட முக்கிய ரயில் நிலைங்களில் ரயில்வே போலீஸாா் புதன்கிழமை காலை 6 மணி முதல் தீவிரமாக கண்காணிப்புப் பணியில் ஈடுபட அறிவுறுத்தப்பட்டுள்ளனா். பயணிகள் அனைவரும் தீவிர சோதனைக்கு பிறகு, ரயில் நிலையங்களுக்கு உள்ளே அனுமதிக்கப்படுவாா்கள். ரயில் நிலையங்கள், ரயில்களில் அடிக்கடி சோதனை நடத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆமென்!

அமெரிக்காவை ஆட்டுவிக்கும் ‘டிக் டாக்’

கேரளம், கா்நாடகத்தில் விறுவிறுப்பான வாக்குப் பதிவு: 88 தொகுதிகளுக்கு 2-ஆம் கட்ட தோ்தல்

நூறு சதவீத வாக்குப்பதிவை உறுதிப்படுத்துவோம்!

பி.இ.ஓ. பணியிடங்கள்: தற்காலிக பட்டியல் அனுப்பிவைப்பு

SCROLL FOR NEXT