திருச்சியில் அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தினர் சார்பில் அரை நிர்வாண போராட்டம் செவ்வாய்க்கிழமை காலை ஆட்சியர் அலுவலகம் அருகே நடைபெற்றது.
இளைஞர் பெருமன்றத்தின் மாவட்டச் செயலாளர் செல்வகுமார் தலைமையில் நடைபெற்ற இப்போராட்டத்தில் தமிழக கட்டுமான, சிறு, குறு தொழில் நிறுவனங்களில் தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு வேலை வழங்குவதில் முன்னுரிமை, தமிழக மத்திய அரசுப் பணிகளில் தமிழக இளைஞர்களுக்கே வேலைவாய்ப்பு, டிஎன்பிஎஸ்சி தேர்வுகளில் வெளிமாநிலத்தவரும் பங்கேற்கலாம் எனும் அரசாணையை ரத்து செய்தல் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்திக் கோஷமிட்டனர்.