சீர்காழி வட்டத்தில் நேற்று இரவு 4 மணி நேரத்திற்கு மேல் பலத்த காற்றுடன் மழை பெய்தது. இடி, மின்னலுடன் பெய்யத் தொடங்கிய மழை பலத்த மழையாகப் பெய்தது.
காற்றுடன் பெய்த மழையால் சீர்காழி, கொள்ளிடம், வைத்தீஸ்வரன் கோயில், திருவெண்காடு ஆகிய பகுதிகளில் பல இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்தன. இதனால் 50க்கும் மேற்பட்ட கிராமங்களில் இரவு முழுவதும் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.
பல கிராமங்களில் பகலிலும் துண்டிக்கப்பட்ட மின்சாரம் வரவில்லை. சீர்காழியில் 64 மி.மீ மழையும், கொள்ளிடத்தில் 105 மி.மீ மழையும் பதிவானது. இந்த மழையால் பருத்தி விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். சம்பா நேரடி விதைப்பு விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். வீடுகள், மின் கம்பிகள் மீது விழுந்த மரங்கள் அகற்றும் பணி நடைபெறுகிறது.