சென்னை தவிர்த்து தமிழகத்தின் பிற மாவட்டங்களில் புதிதாக 4,269 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது இன்று (செவ்வாய்க்கிழமை) உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கரோனா தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டோர், மாவட்டவாரியாக பாதிக்கப்பட்டோர் உள்ளிட்டவை பற்றிய தரவுகள் அடங்கிய செய்திக் குறிப்பை மாநில சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் புதிதாக 5,546 பேருக்கு கரோனா தொர்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அதிகபட்சமாக சென்னையில் 1,277 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
வழக்கம்போல் சென்னைக்கு அடுத்தபடியாக கோவையில் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். அங்கு புதிதாக 572 பேருக்கு தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
மாவட்டவாரியாக விவரம்: இங்கே க்ளிக் செய்யவும்..