சேலம் மாவட்டம் வாழப்பாடியில், மத்திய அரசின் புதிய வேளாண் மசோதாவை திரும்ப பெறக்கோரி தி.மு.க., காங்கிரஸ் கூட்டணி கட்சிகளின் சார்பில் திங்கள்கிழமை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
வாழப்பாடி பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற தி.மு.க., ஒன்றிய செயலாளர் எஸ்.சி. சக்கரவர்த்தி தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், ஏற்காடு தொகுதி தி.மு.க. முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தமிழ்ச்செல்வன், காங்கிரஸ் கட்சி முன்னாள் மாவட்ட தலைவர் செல்வராஜ், கொங்கு மக்கள் கட்சி நிர்வாகி மகாலிங்கம், ஐ.ஜே.கே., மாநில மகளிரணி நிர்வாகி அமுதா ராஜேஸ்வரன், மனிதநேய மக்கள் கட்சிகள் நவாஸ் மற்றும் தி.மு.க. நிர்வாகிகள் சடையன், கோவிந்தன், உமாபதி, ராயர், விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகி வி.ந.சுந்தர், ஒன்றிய செயலாளர் முல்லைவாணன் உள்ளிட்ட 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தின் போது, விவசாயிகளை பாதிக்கும் வேளாண் மசோதா சட்டத்தை மத்திய அரசு திரும்பப்பெற வேண்டுமென வலியுறுத்தி கோஷமிட்டனர்.
வாழப்பாடியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற தி.மு.க., காங்கிரஸ் கூட்டணி கட்சி நிர்வாகிகள்.