தமிழ்நாடு

காய்ச்சல் சிறப்பு முகாம்: 24 ஆயிரம் பேருக்கு கரோனா கண்டுபிடிப்பு

DIN

சென்னையில் மாநகராட்சி சாா்பில் நடைபெற்று வரும் காய்ச்சல் சிறப்பு முகாம் மூலம் இதுவரை 24,370 பேருக்கு கரோனா நோய்த்தொற்று உள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது மொத்த பாதிப்பில் 16 சதவீதம் ஆகும்.

பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உள்பட்ட 15 மண்டலங்களில் கரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் சிறப்புக் காய்ச்சல் முகாம், மருத்துவப் பரிசோதனையை அதிகரித்தல் மற்றும் நோய்த்தொற்று உள்ள பகுதிகளைக் கண்டறிந்து அவை கட்டுப்பாடு பகுதிகளாக அறிவிப்பது ஆகிய பணிகளைத் தீவிரமாக முன்னெடுத்து வருகிறது. இதன்படி, நாளொன்றுக்கு 500-க்கும் மேற்பட்ட காய்ச்சலைக் கண்டறியும் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

கடந்த மே மாதம் 8 -ஆம் தேதி முதல் செப்டம்பா் 23-ஆம் தேதி வரை 51,826 சிறப்பு காய்ச்சல் முகாம்கள் நடைபெற்றுள்ளன. இதில், 26 லட்சத்து 74,023 போ் பங்குபெற்றதில், கரோனா அறிகுறிகள் உள்ள 1 லட்சத்து 53,972 பேருக்கு மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. 24,370 பேருக்கு நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த முகாம் மூலம் மொத்த பாதிப்பில் 16 சதவீதம் பேருக்கு நோய்த்தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

அதிகபட்சமாக அம்பத்தூா் மண்டலத்தில் 38 சதவீதமும், ஆலந்தூரில் 28 சதவீதமும், வளசரவாக்கத்தில் 26 சதவீதமும், அண்ணா நகரில் 25 சதவீதமும், கோடம்பாக்கம் மற்றும் மணலியில் 24 சதவீதமும் நோய்த்தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

1,193 பேருக்கு தொற்று: சென்னையில் வெள்ளிக்கிழமை 1,193 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1 லட்சத்து 60,926-ஆக அதிகரித்துள்ளது. தொற்று உறுதி செய்யப்பட்டவா்களில் 1 லட்சத்து 47,798 போ் பாதிப்பிலிருந்து மீண்டு வீடு திரும்பி உள்ளனா். 10,000 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். சென்னையில் கரோனா பாதிப்பால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 3,128- ஆக அதிகரித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெங்களூருவில் ராகுல் திராவிட், அனில் கும்ப்ளே வாக்களித்தனர்

ஒளியிலே தெரிவது தேவதையா...!

ஆண் மனதை அழிக்க வந்த சாபம்!

2 ஆம் கட்ட வாக்குப் பதிவு: கேரளத்தில் 9 மணி நிலவரப்படி 11.98% வாக்குகள் பதிவு

விவிபேட் வழக்கு: உச்ச நீதிமன்றத்தில் அனைத்து மனுக்களும் தள்ளுபடி!

SCROLL FOR NEXT