சென்னை: பொறியியல் சேர்க்கைக்கான கலந்தாய்வுக்கு விண்ணப்பித்தவர்களுக்கான தரவரிசைப் பட்டியல் வரும் 28 ஆம் தேதி வெளியிடப்பட்டும் என்று உயர்கல்வித்துறை தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக உயர்கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், இன்னும் சில் மாணவர்கள் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்யாததால் மேலும் அவகாசம் கேட்டுள்ள நிலையில், இன்று வெள்ளிக்கிழமை வெளியிடப்பட வேண்டிய தரவரிசை பட்டியல் தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, பொறியியல் தரவரிசைப் பட்டியில் வரும் 28 ஆம் தேதி மாலை வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.