திருவாடானையில் கம்னியூஸ்ட் கட்சியினர் வேளாண் மசோதா அவசர சட்டத்தைத் திரும்பப் பெறக்கோரி சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. இதில், 20க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.
திருவாடானையில் வேளாண் மசோதா அவசரச் சட்டத்தைத் திரும்பப் பெறக்கோரி இந்திய கம்னியூஸ்ட் கட்சியினர் மார்சிஸ்ட் கம்னியூஸ்ட் கட்சியினர் வெள்ளிக்கிழமை பாரத ஸ்டேட் வங்கி முன்பாக மதுரை தொண்டி தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. சாலை மறியலில் ஈடுபட்ட 20க்கும் மேற்பட்டவர்களைக் கைது செய்து தனியார் மண்டபத்தில் அடைத்தனர்.
இதில் இந்திய கம்னியூஸ்ட் கட்சி மாவட்ட துணை செயலாளர் குருசாமி , மார்சிஸ்ட் கம்னியூஸ்ட் விவசாய சங்க மாநில துணைத் தலைவர் முத்துராமு தாலுகா செயலாளர் ராசு, தங்கராசு.விவசாய சங்க குழு உறுப்பினர் நாகநாதன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.