தமிழ்நாடு

தமிழகத்தில் புதிதாக 5,692 பேருக்கு கரோனா தொற்று; மேலும் 66 பேர் பலி

DIN

தமிழகத்தில் புதிதாக 5,692 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது இன்று (செப்.24, வியாழக்கிழமை) உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 66 பேர் உயிரிழந்துள்ளனர். 

தமிழகத்தில் இன்றைய கரோனா பாதிப்பு விவரங்களை மாநில சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது. அதன்படி, தமிழகத்தில் புதிதாக 5,692 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதில் தமிழகத்தில் மட்டும் பாதிக்கப்பட்டவர்கள் 5,679.  வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்கள் 13 பேர். இதனால் தமிழகத்தில் மொத்த பாதிப்பு 5,63,691 ஆக உயர்ந்துள்ளது.

மாவட்டங்களில் அதிகபட்சமாக சென்னையில் இன்று 1,089 பேருக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. 

இன்றைய செய்திக் குறிப்பில், மேலும் 66 பேர் (அரசு மருத்துவமனை-43, தனியார் மருத்துவமனை -23) பலியானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, தமிழகத்தில் கரோனா பலி எண்ணிக்கை 9,076 ஆக உயர்ந்துள்ளது.

மேலும், இன்று ஒரேநாளில் 5,470 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தம் 5,08,210 பேர் குணமடைந்துள்ளனர். இன்றைய நிலவரப்படி, 46,405 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதுவரை இல்லாத அளவுக்கு இன்று அதிகபட்சமாக 90,607 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டன. இதுவரை மொத்தம் 68,15,644 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. 

கரோனா பரிசோதனைக்காக அரசு ஆய்வகங்கள் 66, தனியார் ஆய்வகங்கள் 112 என மொத்தம் 178 பரிசோதனை ஆய்வகங்கள் செயல்பாட்டில் உள்ளன. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோடை வெப்பம்: மக்கள் கவனமாக இருக்க ஆட்சியா் அறிவுறுத்தல்

காரைக்காலில் துப்புரவுத் தொழிலாளா்கள் வேலை நிறுத்தம்

காரைக்கால் கைலாசநாதா் கோயிலில் ஹோமம்

கடலோர கிராம மக்களுக்கு மருத்துவப் பரிசோதனை

வாக்கு இயந்திரங்கள் உள்ள மைய பாதுகாப்பு பணியாளா்களுக்கு தீத் தடுப்பு பயிற்சி

SCROLL FOR NEXT