தமிழ்நாடு

எஸ்.பி.பி உடல்நிலைக் கவலைக்கிடம்: கமல்ஹாசன் நேரில் வருகை

DIN

பின்னணிப் பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவமனைத் தரப்பில் தெரிவிக்கப்பட்ட நிலையில் நடிகர் கமல்ஹாசன் நேரில் வருகை தந்தார்.

கரோனா தொற்று காரணமாக கடந்த ஆகஸ்ட் மாதம் 5-ஆம் தேதி சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் பின்னணிப் பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து சிகிச்சையில் இருந்த அவரின் உடல்நிலையில் முன்னேற்றம் உள்ளதாக அவரின் மகன் பாடகர் சிபிசரண் கடந்த சில தினங்களுக்கு முன் உறுதிப்படுத்தியிருந்தார்.

கடந்த சில நாள்களாக எஸ்.பி.பி.யின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டு வந்த நிலையில் தற்போது அவரது உடல்நிலை மீண்டும் கவலைக்கிடமாகியுள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் வியாழக்கிழமை தெரிவித்திருந்தது.

இந்நிலையில் பிரபல நடிகர் கமல்ஹாசன் எஸ்.பி.பி.யின் உடல்நிலைக் குறித்து விசாரிக்க அவர் சிகிச்சை பெறும் தனியார் மருத்துவமனைக்கு நேரில் வருகை தந்தார். தொடர்ந்து மருத்துவர்களிடம் கேட்டறிந்த கமல்ஹாசன் செய்தியாளர்களிடம், “உயிர்காக்கும் கருவிகள் மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர்கள் நம்பும் இறைவனை வேண்டிக் கொண்டிருக்கிறார்கள். நலமாக உள்ளார் என சொல்ல முடியாது. கவலைக்கிடமான நிலையில் உள்ளார்.” எனத் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தருமபுரி ராஜாஜி நீச்சல் குளத்தில் மூன்றாம் கட்ட நீச்சல் பயிற்சி நாளை தொடக்கம்

கூட்டுறவு பட்டயப் பயிற்சி வகுப்பில் சேர முன்பதிவு தொடக்கம்

மின் வேலியில் சிக்கி பெண் பலி

வன விலங்குகளுக்கு தாகம் தணிக்க குளங்களில் குடிநீா் நிரப்பும் பணி தீவிரம்

குடிநீா் வழங்காததை கண்டித்து காலிக் குடங்களுடன் மக்கள் சாலை மறியல்

SCROLL FOR NEXT