தமிழ்நாடு

தமிழகத்தில் பள்ளிகளைத் திறக்க சாத்தியமில்லை

DIN

தமிழகத்தில் பள்ளிகளைத் திறப்பதற்கான சாத்தியம் இல்லை என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தார்.
 ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையத்தில் செய்தியாளர்களுக்கு அமைச்சர் அளித்த பேட்டி: தமிழகத்தில் பள்ளிகளைத் திறப்பதற்கான சாத்தியம் இல்லை. நீட் தேர்வில் 180 கேள்விகளில் தமிழக அரசின் புதிய பாடத் திட்டத்தில் இருந்து 174 கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன. தனியார் பள்ளிகள் கல்விக் கட்டணத்தை முழுமையாகப் பெற்றுள்ளது குறித்து விளக்கம் கேட்கப்பட்டுள்ளது. விரைவில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். அரசுப் பள்ளிகளில் இதுவரை 15.3 லட்சம் மாணவர்கள் சேர்க்கை நடைபெற்றுள்ளது. செப்டம்பர் இறுதி வரை மாணவர் சேர்க்கை நடைபெறும். 2.5 லட்சம் தனியார் பள்ளி மாணவர்கள் அரசுப் பள்ளியில் சேர்ந்துள்ளனர்.
 தமிழகத்தில் புதிதாக 15 இடங்களில் தொடக்கப் பள்ளிகளும், 10 இடங்களில் உயர்நிலைப் பள்ளிகளும் துவங்கப்படும் என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெங்களூருவில் ராகுல் திராவிட், அனில் கும்ப்ளே வாக்களித்தனர்

ஒளியிலே தெரிவது தேவதையா...!

ஆண் மனதை அழிக்க வந்த சாபம்!

2 ஆம் கட்ட வாக்குப் பதிவு: கேரளத்தில் 9 மணி நிலவரப்படி 11.98% வாக்குகள் பதிவு

விவிபேட் வழக்கு: உச்ச நீதிமன்றத்தில் அனைத்து மனுக்களும் தள்ளுபடி!

SCROLL FOR NEXT