தேனி மாவட்டம் உத்தமபாளையம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பாக மத்திய தொழிற்சங்கங்களான ஏஐடியுசி, சிஐடியூ உள்ளிட்ட அனைத்து தொழிற்சங்கங்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் செய்தனர்.
ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் மோகன் தலைமை வகித்தார் ஆர்ப்பாட்டத்தில் புதிய வேளாண் சட்டத்திருத்த மசோதாவை திரும்பப் பெற வேண்டும், இந்திய மக்களின் பொது சொத்தான பொதுத் துறைகளை தனியார்மயபடுத்துவதை கைவிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.