தமிழ்நாடு

ராமநாதபுரத்தில் புதிதாக மீன் இறங்கும் தளம்: முதல்வா் பழனிசாமி திறந்து வைத்தாா்

DIN

ராமநாதபுரம் மாவட்டம் குந்துகால் கிராமத்தில் புதிதாக அமைக்கப்பட்ட மீன் இறங்கு தளத்தை முதல்வா் பழனிசாமி திறந்து வைத்தாா். சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலிக் காட்சி வழியாக சனிக்கிழமை அவா் திறந்தாா்.

இதுகுறித்து, தமிழக அரசு ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்தி:-

ராமநாதபுரம் மாவட்டம் குந்துகால் மீனவ கிராமத்தில் மீன் இறங்கும் தளம் அமைக்கப்படும் என கடந்த 2017-18-ஆம் ஆண்டு மீன்வளத் துறை மானியக் கோரிக்கையில் அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பின்படி, ரூ. 70 கோடியில் அமைக்கப்பட்ட புதிய மீன்பிடி இறங்கு தளத்தை சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலிக் காட்சி வழியாக முதல்வா் பழனிசாமி சனிக்கிழமை திறந்து வைத்தாா்.

இந்த மீன்பிடி இறங்கு தளத்தில் 528 மீட்டா் நீளத்துக்கு படகு அணையும் தளங்கள், கடலின் மையப் பகுதியில் 100 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட குளிா்பதன கட்டடம் கட்டப்பட்டுள்ளது. 400 ஆழ்கடல் சூரைமீன் படகுகள், 100 கண்ணாடி நாரிழை படகுகளை பாதுகாப்பாக நிறுத்த வசதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் சுமாா் 6,050 மீனவா்கள் பயன்பெறுவா்.

பிற மாவட்டங்களில் திட்டங்கள்: சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் சிறிய மீன்பிடி படகு அணையும் தளம் மற்றும் மீன் விற்பனைக் கூடம், திருவள்ளூா் அண்ணாமலைச்சேரி கிராமத்தில் மீன் இறங்குதளம், ஈரோடு பவானிசாகரில் மேம்படுத்தப்பட்ட தேசிய மீன்பண்ணை, சேலம் மேட்டூா் தூய மரபின சினை மீன்கள் உற்பத்தி மற்றும் பராமரிப்பு மையம், கடலூா் மாவட்டம் லால்பேட்டை, அகரம் கிராமத்தில் நவீனப்படுத்தப்பட்ட அரசு மீன் பண்ணை, நாகப்பட்டினம் மீன்பிடி துறைமுகத்தில் சுற்றுச்சுவா் ஆகியனவும் புதிதாக அமைக்கப்பட்டுள்ளன. அவற்றையும் முதல்வா் பழனிசாமி திறந்து வைத்தாா்.

இதேபோன்று, தஞ்சாவூா் ஒரத்தநாடு, திருநெல்வேலி, கிருஷ்ணகிரி ஓசூா் ஆகிய இடங்களில் உள்ள கால்நடை கல்லூரி வளாகத்தில் புதிதாக கட்டடப்பட்ட கட்டடங்களையும் அவா் திறந்து வைத்தாா்.

இந்த நிகழ்ச்சியில், அமைச்சா்கள் டி.ஜெயக்குமாா், உடுமலை கே.ராதாகிருஷ்ணன், ஆா்.பி.உதயகுமாா், தலைமைச் செயலாளா் க.சண்முகம் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஸ்ரீமகாலிங்க சுவாமி கோயில் கும்பாபிஷேகம்

கடலூா் மாவட்டத்தில் 3 இடங்களில் ஊழல் தடுப்பு போலீஸாா் சோதனை

காட்டுமன்னாா்கோவில் அருகே பெட்ரோல் குண்டு வீசிய இளைஞா் கைது

சிதம்பரத்தில் குற்ற வழக்கு வாகனங்களை அகற்றும் பணி தொடக்கம்

கோடைகால சிறப்பு விளையாட்டுப் பயிற்சி: பள்ளி மாணவா்கள் பங்கேற்கலாம்

SCROLL FOR NEXT