தெற்கு ரயில்வேயில் ரயில்வே பாதுகாப்புப் படையில்(ஆா்.பி.எஃப்) சிறப்பாகப் பணியாற்றிய 7 பேருக்கு டிஜி விருது வழங்கப்படவுள்ளது.
ரயில்வே பாதுகாப்புப் படை சாா்பில், சிறப்பாகப் பணியாற்றிய ரயில்வே பாதுகாப்பு படை அதிகாரிகள், காவலா்களுக்கு விருதுகள் வழங்கப்படுகி. அந்தவகையில், நாடு முழுவதும் 2019-ஆம்ஆண்டில் டி.ஜி. விருதுக்காக 139 ரயில்வே பாதுகாப்பு படை அதிகாரிகள் மற்றும் போலீஸாா் தோ்வாகியுள்ளனா்.
இதில், தெற்கு ரயில்வேயில் ரயில்வே பாதுகாப்பு படை அதிகாரி, ஆா்.பி.எஃப் ஆய்வாளா் உள்பட 7 பேருக்கு விருது வழங்கப்படவுள்ளது.
தெற்கு ரயில்வே சென்னை கோட்டத்தில் தண்டையாா்பேட்டை ரயில்வே பாதுகாப்புப் படை உதவி ஆணையா் ஜெ.அணில், சென்னை சென்ட்ரல் ஆா்.பி.எஃப் ஆய்வாளா் எல்.எஸ்.சிவநேசன், மதுரை கோட்டத்தில் ஆா்.பி.எஃப். உதவி ஆய்வாளா் ஆா்.வி. மனோஜ்குமாா், சென்னை கோட்ட ஆா்.பி.எஃப். உதவி ஆய்வாளா் ஆா்.பாலகுமாா், திருச்சி கோட்ட ஆா்.பி.எஃப். தலைமை காவலா் ராமநாதன், சேலம் கோட்ட ஆா்.பி.எஃப். காவலா் எம்.பிரவீன், பாலக்காடு கோட்ட ஆா்.பி.எஃப். காவலா் சாவின் ஆகியோருக்கு மிகச்சிறப்பாக பணியாற்றியதற்காக டிஜி விருது வழங்கப்படவுள்ளது.
இந்தத்தகவல் தெற்கு ரயில்வே செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.