தமிழ்நாடு

70 அடி கிணற்றில் தவறி விழுந்த இளைஞர் மீட்பு

DIN

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே 70 அடி ஆழமுள்ள கிணற்றில் தவறி விழுந்து உயிருக்குப் போராடிய இளைஞரைத் தீயணைப்புத் துறையினர் மீட்டுள்ளனர். 

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ளது மீனாட்சிபுரம். அங்கு ஊர் கிணறு ஒன்று உள்ளது. அந்த கிணற்றில் இளைஞர் ஒருவர் தவறி விழுந்து விட்டதாகவும் அவரை மீட்க வேண்டும் என திருவில்லிபுத்தூர் தீயணைப்புத் துறை அதிகாரிகள் குருசாமி மற்றும் அந்தோணிசாமி ஆகியோருக்கு தகவல் கிடைத்தது. இந்த தகவலின் பேரில் தீயணைப்பு துறையினர் விரைந்து சென்று பார்த்தபோது அந்தக் கிணறு 70 அடி ஆழம் இருந்தது அதில்  5 அடி தண்ணீர் இருந்தது அந்த கிணற்றில் இளைஞர் ஒருவர் தவறி விழுந்து மேலே வரமுடியாமல் கிணற்றிலிருந்த கடந்த 5 அடி தண்ணீரில் தத்தளித்துக் கொண்டிருந்தார்

இதனைத் தொடர்ந்து ஸ்ரீவில்லிபுத்தூர் தீயணைப்புத் துறையினர் கயிறு கட்டி உள்ளே இறங்கி இளைஞரை மீட்டனர். அவரை விசாரித்தபோது அவர் பெயர் பாண்டி (30)என்பதும் அதே பகுதியைச் சேர்ந்தவர் என்பதும் தெரிய வந்தது எப்படி கிணற்றுக்குள் விழுந்தார் எனத்  தீயணைப்புத் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பள்ளிகளில் குழந்தைகளை அடித்தாலோ, திட்டினாலோ நடவடிக்கை எடுக்கப்படும்: கல்வித் துறை

ரஷியாவுக்கு உதவினால் பொருளாதாரத் தடைகள்

தென்னிந்திய நீா்தேக்கங்களில் நீா் இருப்பு: 10 ஆண்டுகள் இல்லாத அளவுக்கு கடும் சரிவு

காஸாவில் வெடிக்காத குண்டுகளை அகற்ற 14 ஆண்டுகள் ஆகும்!

ராணுவத்தின் படுகொலை பற்றிய செய்தி: புா்கினா ஃபாசோவில் பிபிசி-க்குத் தடை

SCROLL FOR NEXT