கோவையில் இதுவரை இல்லாத அளவில் ஒரேநாளில் புதிதாக 648 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது இன்று (திங்கள்கிழமை) உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழக கரோனா பாதிப்பு நிலவரம் பற்றிய தரவுகள் அடங்கிய செய்திக் குறிப்பு வெளியாகியுள்ளது. மாநிலத்தில் புதிதாக 5,344 பேருக்கு தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் சென்னையில் மட்டும் 982.
கடந்த சில நாள்களாகவே அதிகம் பாதிப்புகளைப் பதிவு செய்து வரும் கோவை மாவட்டம் இன்று புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது. இதுவரை இல்லாத அளவில் ஒரேநாளில் 648 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மாவட்டவாரியாக விவரம்: இங்கே க்ளிக் செய்யவும்..