சுருக்கு மடி வலைக்கான தடையை விலக்கக் கோரி கடலூர் அரசு தலைமை மருத்துவமனை முன்பு மக்கள் மறியலில் ஈடுபட்டனர்.
அரசால் தடை செய்யப்பட்ட சுருக்கு மடி வலையை ரூ. 1.25 கோடி வரையில் கடனாக பெற்றுக் தொழில் செய்து வந்த கடலூர் தேவனாம்பட்டினத்தைச் சேர்ந்த சு.சங்கர் (39) என்பவர் கடனை திருப்பி செலுத்த முடியாத காரணத்தால் சனிக்கிழமை இரவில் தற்கொலை செய்து கொண்டார்.
இதையடுத்து, சுருக்கு மடி வலைக்கான தடையை விலக்கக் கோரி அவரது உறவினர்கள் கடலூர் அரசு தலைமை மருத்துவமனை முன்பு மறியலில் ஈடுபட்டனர்.