புரட்டாசி மாதத்தின் முதல் சனிக்கிழமையை முன்னிட்டு பவானி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள மலைக் கோயில்கள் மற்றும் பெருமாள் கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் சனிக்கிழமை நடைபெற்றன.
பவானியை அடுத்த பெருமாள் மலை உச்சியிலுள்ள மங்களகிரி பெருமாள் கோயிலில் அதிகாலை சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டன. பவானி சங்கமேஸ்வரர் கோயிலில் உள்ள ஆதிகேசவப் பெருமாள் சன்னதியில் சிறப்பு அபிஷேக, அலங்கார வழிபாடுகள் நடைபெற்றன.
பவானி அடுத்துள்ள ஊராட்சிக்கோட்டை வேதகிரி மலை உச்சியிலுள்ள பெருமாள் கோயிலில் வழிபாடுகள் நடத்தப்பட்டன. இதேபோன்று, பவானி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள பெருமாள் கோயில்களில் சிறப்புப் பூஜைகள் நடத்தப்பட்டன. இதில், பக்தர்கள் சமூக இடைவெளியுடன் பங்கேற்று இறைவனை வழிபட்டனர்.