தமிழ்நாடு

புரட்டாசி சனிக்கிழமை: மலைக் கோயில்களில் பக்தர்கள் சிறப்பு வழிபாடு

DIN

புரட்டாசி மாதத்தின் முதல் சனிக்கிழமையை முன்னிட்டு பவானி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள மலைக் கோயில்கள் மற்றும் பெருமாள் கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் சனிக்கிழமை நடைபெற்றன.

பவானியை அடுத்த பெருமாள் மலை உச்சியிலுள்ள மங்களகிரி பெருமாள் கோயிலில் அதிகாலை சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டன. பவானி சங்கமேஸ்வரர் கோயிலில் உள்ள ஆதிகேசவப் பெருமாள் சன்னதியில் சிறப்பு அபிஷேக, அலங்கார வழிபாடுகள் நடைபெற்றன.

பவானி அடுத்துள்ள ஊராட்சிக்கோட்டை வேதகிரி மலை உச்சியிலுள்ள பெருமாள் கோயிலில் வழிபாடுகள் நடத்தப்பட்டன. இதேபோன்று, பவானி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள பெருமாள் கோயில்களில் சிறப்புப் பூஜைகள் நடத்தப்பட்டன. இதில், பக்தர்கள் சமூக இடைவெளியுடன் பங்கேற்று இறைவனை வழிபட்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

2ஆம் கட்ட வாக்குப்பதிவில் வாக்களித்த மக்களுக்கு நன்றி: பிரதமர் மோடி

அழகென்றால் அவள்தானா... ஷ்ரத்தா தாஸ்!

நித்திய கல்யாணி.. நிஹாரிகா!

பாரமுல்லா என்கவுன்டரில் இரண்டு பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

டி20 உலகக் கோப்பையில் இவர்கள் இருவரும் வேண்டும்: சௌரவ் கங்குலி

SCROLL FOR NEXT