தமிழ்நாடு

திருப்பூரில் பள்ளத்தை தூர்வாரக்கோரி கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

DIN

திருப்பூர்: திருப்பூர் வீரபாண்டி அருகே உள்ள பள்ளத்தை தூர்வாரக்கோரி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருப்பூர் மாநகராட்சிக்கு உள்பட்ட வீரபாண்டி மாகாளியம்மன் கோவில் அருகே இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு 4 ஆவது மண்டல பொறுப்பாளர் சி.அருணாசலம் தலைமை வகித்தார். 

இதில், பங்கேற்றவர்கள் கூறியதாவது: 

திருப்பூர் மாநகராட்சிக்கு உள்பட்ட வீரபாண்டி மாகாளியம்மன் கோயில்அருகே உள்ள சின்னப்பள்ளம் நீண்ட நாள்களாக தூர்வாரப்படாமல் உள்ளது. இதனால் தற்பொழுது பெய்து வரும் கன மழையால் நீர் வெளியேறமுடியாமல் தொழிற்சாலை மற்றும் குடியிருப்புகளுக்குள் புகுந்து வருகிறது. ஆகவே, உடனடியாக சின்னப்பள்ளதைதூர்வார மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும், ஆலங்காடு பகுதியில் கழிவுநீர் வடிகால் முறையாக சுத்தம் செய்து தண்ணீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர். 

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 4 ஆவது மண்டல செயலாளர் ஆர்.வடிவேல், கிளை செயலாளர் விஜயகுமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஈரோட்டில் மரக்கடை, பர்னிச்சர் கடையில் தீ: ரூ.10 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசம்

ரூ.4 கோடி சிக்கிய வழக்கு: சிபிசிஐடிக்கு மாற்றம்!

ஆம்னி பேருந்து தலைகீழாக கவிழ்ந்து விபத்து: 15 பேர் காயம்

இன்றைய ராசி பலன்கள்!

பாஜகவை மக்கள் மன்னிக்க மாட்டாா்கள்: மம்தா பானா்ஜி

SCROLL FOR NEXT