சேலம்: மேட்டூர் அணையின் நீர்மட்டம் செவ்வாய்க்கிழமை காலை நிலவரப்படி, 100.70 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் நீர் இருப்பு 65.75 டி.எம்.சி.யாக உள்ளது.
மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு நேற்று 15,124 கன அடியாகவிருந்த நிலையில், இன்று காலை நிலவரப்படி 14,210 கன அடியாகக் குறைந்துள்ளது.
அதேவேளையில், அணையிலிருந்து டெல்டா பாசன தேவைக்காக வினாடிக்கு 9,000 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
அணைக்கு நீர்வரத்து குறைந்து வந்தாலும், பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவைவிட அணைக்கு வரும் நீரின் அளவு அதிகமாக இருப்பதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் மெல்ல உயர்ந்து வருகிறது.