தமிழ்நாடு

ஆம்பூர் அருகே விபத்தில் சிக்கிய பார்சல் மினி லாரி மீது மற்றொரு லாரி மோதி விபத்து: ஓட்டுநர், உதவியாளர்கள் படுகாயம்

DIN

ஆம்பூர்: திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே உள்ள சோலூர் பகுதியில் சனிக்கிழமை இரவு சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த தனியார் பார்சல் மினி லாரி ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து தடுப்பு சுவர் மீது மோதி விபத்துக்குள்ளானது. 

இந்நிலையில், நாமக்கலில் இருந்து கோழிகளை ஏற்றிக்கொண்டு வாணியம்பாடி வழியாக சென்னை நோக்கி சென்று கொண்டிருந்தபோது மற்றொரு மினி லாரி விபத்துக்குள்ளான லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில்  2 லாரிகளும் மிகுந்த சேதம் அடைந்தது.  இந்த விபத்தில் லாரி ஓட்டுநர்கள் மற்றும் உதவியாளர்கள் படுகாயமடைந்தனர். 

இதுகுறித்து ஆம்பூர் கிராமிய காவலர்கள் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்றைய ராசி பலன்கள்!

பாஜகவை மக்கள் மன்னிக்க மாட்டாா்கள்: மம்தா பானா்ஜி

இன்று உங்கள் ராசிக்கு எப்படி?

திரவ நைட்ரஜன் கலந்த உணவை தவிா்க்க பிரேமலதா வேண்டுகோள்

அரசு விளையாட்டு விடுதிகளில் சேர மே 5-க்குள் விண்ணப்பிக்கலாம்

SCROLL FOR NEXT