தமிழகத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) புதிதாக 2,869 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழக கரோனா பாதிப்பு நிலவரம் பற்றிய தரவுகள் வெளியாகியுள்ளன. மாநிலத்தில் புதிதாக 2,869 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, மாநிலத்தில் மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 7,09,005 ஆக உயர்ந்துள்ளது.
சென்னையில் மட்டும் 764 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இன்றைய செய்திக் குறிப்பில் மேலும் 31 பேர் பலியானதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, மொத்த பலி எண்ணிக்கை 10,924 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் மேலும் 4,019 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.