தமிழ்நாடு

ஆத்தூர் ராணிப்பேட்டையில் புதிய ஜவுளிக்கடைக்கு சீல்

DIN


ஆத்தூர்: ராணிப்பேட்டையில் புதியதாக இன்று வெள்ளிக்கிழமை திறக்கப்பட்ட ஜவுளிக்கடையை பூட்டி ஆத்தூர் வட்டாசியர் சீல் வைத்தார்.

சேலம் மாவட்டம், ஆத்தூர் ராணிப்பேட்டையில் புதியதாக ஜவுளிக்கடை வெள்ளிக்கிழமை காலை திறக்கப்பட்டது. கடை திறப்பு விழாவை முன்னிட்டு சிறப்புத் தள்ளுபடியாக ஒரு சட்டை ரூ.20, ஒரு புடவை ரூ.23க்கும் விற்பனை செய்தனர். இதனால் அங்கு ஆயிரக்கணக்கானோர் கூடினர். இதனால் சமூக இடைவெளி, முகக்கவசம் அணியாமல் ஏராளமானோர் கூடியுள்ளனர். 

இதனையடுத்து அங்கு வந்த ஆத்தூர் வட்டாட்சியர் அ.அன்புச்செழியன், காவல் ஆய்வாளர் எஸ்.உமாசங்கர், நகராட்சி வருவாய் ஆய்வாளர் நாகராஜன், துப்புரவு அலுவலர் என்.திருமூர்த்தி ஆகியோர் கடையில் இருந்த பொதுமக்களை வெளியேற்றிவிட்டு கடைக்கு சீல் வைத்தனர். இதனால் அங்கு பரபரப்பு காணப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவை 2-ம் கட்ட தேர்தல்: கவன ஈர்ப்புச் சித்திரம் வெளியிட்ட கூகுள்!

இரு பைக்குகள் நேருக்கு நேர் மோதி விபத்து: பாஜக நிர்வாகி பலி

தென்னிந்தியாவின் கிளியோபாட்ரா...!

ம.பி.யில் 2-ம் கட்ட வாக்குப்பதிவு: 11 மணி நிலவரம்!

பட்டத்து ராணி.....சாக்‌ஷி அகர்வால்

SCROLL FOR NEXT