மதுரை விமான நிலையத்தில் எல்லை பாதுகாப்புப் படை, ராணுவம், காவல்துறைகளில் பணியின்போது உயிர் நீத்தவர்களுக்கு வீரவணக்கம் செலுத்தும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.
இதில் துணை கமாண்டோ உமாமகேஸ்வரன் தலைமையில் உதவி கமெண்டோ சனிஷ்க் மற்றும் மத்திய தொழில் பாதுகாப்புப்படை வீரர்கள் உள்ளிட்டோர் மதுரை விமான நிலையத்தில் பணியின்போது உயிர் நீத்த ஈரண்ணநாயக. வேட்பால், மகேந்திர குமார் பஸ்வான், குட்டு குமார், அலேக் நிரஞ்சன் சிங், குல்தீப் ஆகிய வீரர்களுக்கு மலர் வளையம் வைத்து வீரவணக்கம் செலுத்தி இரண்டு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தினர்.