விளாத்திகுளத்தில் அதிமுகவினர் சாலை மறியலில் ஈடுபட்டதால் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
அண்மையில் அதிமுகவிலிருந்து விலகி திமுகவில் இணைந்த முன்னாள் எம்எல்ஏ மார்க்கண்டேயன் தலைமையில் விளாத்திகுளத்தில் திமுக கொடியேற்று விழா நடைபெற்ற நேரத்தில் அங்கு வந்த விளாத்திகுளம் எம்எல்ஏ சின்னப்பன் தலைமையில் அதிமுகவினர் திரண்டு வந்து அதே பகுதியில் கொடி ஏற்றுவதற்கு வருகை தந்தனர்.
காவல்துறையினரின் தடையை மீறி அதிமுகவினர் தள்ளுமுள்ளுவில் ஈடுபட்டதால் காவல்துறையினர் தடியடி நடத்தினர். இதையடுத்து காவல்துறையைக் கண்டித்து அதிமுக எம்எல்ஏ சின்னப்பன் தலைமையில் சாலை மறியல் நடைபெற்று வருகிறது.
மேலும், தொடர்ந்து அதிமுகவினர் மறியலில் ஈடுபட்டு வருவதால் அதிரடி படை கமாண்டோ போலீசார் குவிக்கப்பட்டுள்ளது. சம்பவ இடத்தில் நெல்லை சரக டிஐஜி பிரவீன்குமார் அபினவ் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.