கரோனா விதிமுறைகளை மீறியதால் சென்னை தி.நகரில் உள்ள தனியார் ஜவுளிக்கடைக்கு மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனர்.
சென்னை தியாகராய நகரில் உள்ள பிரபல தனியார் ஜவுளிக் கடையான குமரன் சில்க்ஸ்-ல் கரோனா விதிமுறைகளை மீறி, சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்காமல் விற்பனை செய்யப்படுவதாக சமூக வலைத்தளங்களில் விடியோ வெளியானது.
இதையடுத்து, கரோனா தொற்று பரவும் இந்த சூழலில் மக்கள் அதிக அளவில் கூடியதைத் தடுக்காததால் கடைக்கு சீல் வைத்து மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.