சேலம்: அதிமுக 49 ஆம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு, தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி தனது சொந்த ஊரான எடப்பாடி சிலுவம்பாளையம் கிராமத்தில் சனிக்கிழமை காலை கட்சி கொடி ஏற்றி வைத்தார். கட்சி தொண்டர்களுக்கு இனிப்பு வழங்கினார்.
தாயாரின் மறைவை முன்னிட்டு எடப்பாடி சிலுவம்பாளையம் கிராமத்தில் தங்கியிருப்பதால் கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்வருமான எடப்பாடி கே.பழனிசாமி சொந்த கிராமத்தில் வீட்டு எதிரில் சனிக்கிழமை காலை 8.30 மணி அளவில் கட்சி கொடியை ஏற்றி வைத்தார். இதில் அதிமுக நிர்வாகிகள், கட்சி தொண்டர்கள் பங்கேற்றனர்.