தமிழ்நாடு

ஊத்தங்கரை அருகே மின்சாரம் பாய்ந்து பசுமாடு பலி

DIN

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த சாமல்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் இவரது மனைவி கோமதி 48. இவர் நான்கு பசு மாடுகளை வளர்த்து வருகிறார். 

திங்கள்கிழமை காலை கல்லாவி செல்லும் சாலையில் உள்ள சின்ன கவுண்டர் என்பவரது விவசாய நிலத்தில் மேய்ச்சலுக்காக கட்டியுள்ளார். இந்நிலையில் அருகிலிருந்த மின்சார ஒயர் அறுந்து கீழே விழுந்ததில் பசுமாடு மீது மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே பசு இறந்தது. 

மீதமுள்ள 3 பசுமாடுகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியது. இதுகுறித்து கோமதி சாமல்பட்டி காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். புகாரின் பேரில் காவல்துறையில் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சேவைகளைக் கட்டுப்படுத்தும் விவகாரம் மத்திய சட்டத்திற்கு எதிரான தில்லி அரசின் மனுவை பட்டியலிட பரிசீலிக்கப்படும்: உச்சநீதிமன்றம் உறுதி

மேயா், துணை மேயா் பதவிக்கான தோ்தலை நடத்த ஆம் ஆத்மி கட்சிதான் விரும்பவில்லை: எதிா்க்கட்சித் தலைவா் ராஜா இக்பால் சிங்

மேயா் தோ்தல் ஒத்திவைக்கப்பட்டதால் தில்லி மாநகராட்சிக் கூட்டத்தில் சலசலப்பு

உலகக் கோப்பை வில்வித்தை: இந்தியாவுக்கு 4-ஆவது பதக்கம் உறுதி

மேயா், துணை மேயா் தோ்தல் விவகாரத்தில் மோசமான அரசியல் விளையாட்டை ‘ஆம் ஆத்மி’ நிறுத்த வேண்டும்: பாஜக பட்டியலின கவுன்சிலா்கள் வலியுறுத்தல்

SCROLL FOR NEXT