நிவர் புயல் கரையைக் கடக்க நெருங்கி வரும் நிலையில், மாமல்லபுரத்தில் காற்றின் வேகம் பலமாக உள்ளது.
வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள நிவர் புயல் புதன்கிழமை நள்ளிரவு, வியாழக்கிழமை அதிகாலை அதி தீவிரப் புயலாக கரையைக் கடக்கிறது. இந்தப் புயலின் தாக்கம் 6 மணி நேரத்திற்குத் தொடரும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
இந்த நிலையில், புயல் நெருங்கி வரும் நிலையிலேயே மாமல்லபுரத்தில் பலத்த காற்று வீசி வருகிறது. கடல் அலைகள் ராட்சத அலைபோல் காட்சியளிக்கின்றன. இந்தக் காட்சிகள் நிவர் புயலின் வீரியத்தன்மையை உணர்த்துகின்றன.
விடியோ: