தமிழ்நாடு

மேற்கு வங்கத்தைச் சேர்ந்த 10 பேர் புதுச்சேரியில் தவிப்பு

DIN

விழுப்புரம் மாவட்டம், பட்டானூர் தனியார் விடுதியில் தங்கியிருந்த மேற்கு வங்கத்தைச் சேர்ந்த 10 பேர் புதுச்சேரியில் தவித்து வருகின்றனர். 

புதுச்சேரி ஜிப்மரில் சிகிச்சை பெற்று வரும் தனது உறவினரைப் பார்ப்பதற்கு, மருத்துவமனை அருகே உள்ள விழுப்புரம் மாவட்டம், பட்டானூர் தனியார் விடுதியில் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த 10 பேர் தங்கி இருந்தனர். மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த அவர்களை, விடுதி நிர்வாகம், கரோனா பீதியால் ஞாயிற்றுக்கிழமை உடனடியாக வெளியேற்றி உள்ளது.

புதுச்சேரி ஜிப்மருக்கும் செல்ல முடியாமல் தங்கியிருப்பதற்கு வழியின்றி தவித்தனர். இதனையடுத்து திங்கள்கிழமை விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்த அவர்கள், தங்களுக்கு மாவட்ட நிர்வாகம் உதவுமாறு விழுப்புரம் மாவட்ட ஆட்சியர், மாவட்ட கண்காணிப்பாளரிடம் கோரிக்கை வைத்தனர்.

விசாரித்த மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை, கோட்டக்குப்பம் காவல் துணை கண்காணிப்பாளருக்குப் பரிந்துரைத்து, அவர்கள் தங்கியிருக்க உரிய நடவடிக்கை எடுக்கும்படி உத்தரவிட்டார். இதனையடுத்து அவர்கள் கோட்டகுப்பம் புறப்பட்டுச் சென்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவை 2-ம் கட்ட தேர்தல்: கவன ஈர்ப்புச் சித்திரம் வெளியிட்ட கூகுள்!

இரு பைக்குகள் நேருக்கு நேர் மோதி விபத்து: பாஜக நிர்வாகி பலி

தென்னிந்தியாவின் கிளியோபாட்ரா...!

ம.பி.யில் 2-ம் கட்ட வாக்குப்பதிவு: 11 மணி நிலவரம்!

பட்டத்து ராணி.....சாக்‌ஷி அகர்வால்

SCROLL FOR NEXT