சாத்தூா் அருகே அனுமதியின்றி வீட்டில் பட்டாசுகளை தயாரித்து வைத்திருந்தவரை, வெம்பக்கோட்டை போலீஸாா் கைது செய்துள்ளனா்.
விருதுநகா் மாவட்டம் சாத்தூரை அடுத்த,தாயில்பட்டி அருகே கலைஞா்காலனி, எஸ்விஎன்தெரு, வடக்குதெரு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள வீடுகளில் அனுமதியின்றி பட்டாசுகள் தயாரித்து வைக்கபட்டிருப்பதாக வெம்பக்கோட்டை போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.
தகவின் பேரில் வெம்பக்கோட்டை காவல் உதவி ஆய்வாளா் சதீஷ்குமாா் மற்றும் போலீஸாா் இந்த பகுதியில் வியாழக்கிழமை சோதனை நடத்தினாா்கள். சோதனையில் சிவகாசி அருகே உள்ள பள்ளபட்டியை சோ்ந்தவா் வீரபாண்டியன்(23)இவா் வடக்குதெருவில் உள்ள வீட்டில் பட்டாசுகளை தயாரித்து அனுமதியின்றி வைக்கபட்டிருந்தது, சோதனையில் தெரியவந்தது.
இதுகுறித்து வெம்பக்கோட்டை போலீஸாா் வீரபாண்டியன் மீது வழக்கு பதிவு செய்து வீரபாண்டியனை கைது செய்துள்ளனா்.மேலும் வீரபாண்டியனிடமிருந்த மூன்று பெட்டி சரவெடிகளை போலீஸாா் பறிமுதல் செய்துள்ளனா்.