சீனாவில் இருந்து சென்னை திரும்பியவருக்கு கரோனா வைரஸ் நோய் தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது.
சீனாவில் இருந்து கோலாலம்பூர் வழியாக சென்னை வந்த லியோ விஜினுக்கு, விமான நிலையத்தில் நடத்தப்பட்ட பரிசோதனையில் கரோனா வைரஸ் நோய் தொற்று பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது.
இதையடுத்து அவர் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.