மழை தொடர்வதால் காரைக்காலில் பள்ளிகளுக்கு இன்றும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
கனமழை காரணமாக காரைக்கால் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு ஏற்கெனவே 2, 3, 4 ஆகிய தேதிகளில் விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் மழை தொடர்வதால் இன்றும் பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து அம்மாவட்ட ஆட்சியர் அர்ஜூன் சர்மா உத்தரவிட்டுள்ளார்.