தமிழ்நாடு

மேட்டூர் அணையின் நீர்மட்டம் 102.20 அடியை எட்டியது

DIN


மேட்டூர்: மேட்டூர் அணையின் நீர்மட்டம்  102.20 அடியை எட்டியது. 

காவிரி டெல்டா மாவட்டங்களில் பரவலாகப் பெய்து வரும் மழையின் காரணமாக மேட்டூர் அணையிலிருந்து டெல்டா பாசனத்துக்குத் திறக்கப்படும் நீரின் அளவு வினாடிக்கு 500 கன அடியாகக் குறைக்கப்பட்டுள்ளது. இதனால் அணையின் நீர்மட்டம் மெல்ல உயர்ந்து வருகிறது. 

இந்நிலையில், மேட்டூர் அணையின் நீர் மட்டம் வெள்ளிக்கிழமை காலை 102.20 கன அடியாக உள்ளது.  அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 5957கன அடியிலிருந்து 6,116 கன அடியாக அதிகரித்துள்ளது. அணையிலிருந்து டெல்டா பாசனத்துக்குத் திறக்கப்படும் நீரின் அளவு வினாடிக்கு 500 கன அடியாகக் குறைக்கப்பட்டுள்ளது. 

கிழக்கு-மேற்கு கால்வாய்ப் பாசனத்துக்கு வினாடிக்கு 700 கன அடியிலிருந்து 500 கனஅடியாக குறைக்கப்பட்டு திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீர் இருப்பு 67.72 டி.எம்.சி. யாக இருந்தது. மேட்டூரில் 7.40 மி.மீ மழை பதிவாகி உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாசரேத் ஆசிரியா் பயிற்சி பள்ளி ஆண்டு விழா

அடையாளம் தெரியாத வாகனம் மோதி மெக்கானிக் பலி

பணகுடி செங்கல் சூளையில் மலைப் பாம்பு பிடிபட்டது

பெட் பொறியியல் கல்லூரியில் விளையாட்டு விழா

தெற்குகள்ளிகுளத்தில் அதிசய பனிமாதா மலை கெபி திருவிழா தொடக்கம்

SCROLL FOR NEXT