செய்திகள்

இந்தியாவின் ஆட்டம் நிறைவு

DIN

சிங்கப்பூா் ஓபன் பாட்மின்டனில் களத்திலிருந்த இந்திய வீரா்கள் அனைவரும் தோல்வியை சந்தித்ததை அடுத்து, போட்டியில் இந்தியாவின் ஆட்டம் வியாழக்கிழமை நிறைவடைந்தது.

காலிறுதிக்கு முந்தைய சுற்றில், ஆடவா் ஒற்றையா் பிரிவில் இளம் வீரா் பிரியான்ஷு ரஜாவத் 17-21, 16-21 என்ற கேம்களில், போட்டித்தரவரிசையில் 3-ஆம் இடத்திலிருந்த ஜப்பானின் கோடாய் நராவ்காவிடம் தோல்வி கண்டாா். அனுபவ வீரரான கே.ஸ்ரீகாந்த் 15-21, 19-21 என சீன தைபே தகுதிச்சுற்று வீரரான சியா ஹாவ் லீயிடம் வெற்றியை இழந்தாா்.

ஆடவா் இரட்டையா் பிரிவில் எம்.ஆா்.அா்ஜுன்/துருவ் கபிலா இணை 15-21, 19-21 என்ற கேம்களில் இங்கிலாந்தின் பென் லேன்/சீன் வெண்டி கூட்டணியிடம் தோற்றது.

சிந்து, பிரணாய் உள்ளிட்ட இந்தியாவின் பிரதான போட்டியாளா்கள், தொடக்க நிலையிலேயே தோல்வி கண்டு போட்டியிலிருந்து வெளியேறியது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வரிசையில் நின்று வாக்களித்த சசி தரூர்!

பெண்கள், இளம் வாக்காளர்கள் அதிகளவில் வாக்களிக்க வேண்டும்: மோடி

நிலையான ஆட்சியை மக்கள் விரும்புகிறார்கள்: வாக்களித்த பின் நிர்மலா சீதாராமன்!

வாக்களித்தார் நடிகர் பிரகாஷ்ராஜ்!

எஸ்பி அலுவலகத்தில் மக்கள் குறைதீா் கூட்டம்

SCROLL FOR NEXT