இந்த வாரம் முதல் ஐபிஎல் 2022 போட்டி தொடங்குகிறது.
மார்ச் 26 அன்று மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறும் முதல் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸும் கொல்கத்தா நைட்ரைடர்ஸும் மோதுகின்றன.
கடந்த வருடப் போட்டியின் இறுதிச்சுற்றில் இரு அணிகளும் மோதியதில் சிஎஸ்கே அணி வெற்றி பெற்று ஐபிஎல் கோப்பையை வென்றது.
அந்த ஆட்டத்தில் சிஎஸ்கே அணியில் விளையாடிய டு பிளெஸ்சிஸ், ஷர்துல் தாக்குர், ஹேசில்வுட் ஆகிய மூவரும் வேறு அணிகளுக்குத் தேர்வாகியுள்ளார்கள். காயம் காரணமாக தீபக் சஹார் பாதி ஐபிஎல் போட்டியில் கலந்துகொள்ள மாட்டார் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் முதல் ஆட்டத்தில் சிஎஸ்கேவின் பேட்டிங் வரிசை எப்படியிருக்கப் போகிறது?
சிஎஸ்கே அணியின் பயிற்சி முகாமில் கிடைத்த தகவல்களைக் கொண்டு பார்க்கும்போது இதுதான் பேட்டிங் வரிசை என்று கூறப்படுகிறது. வலது, இடது கை பேட்டர்கள் கிட்டத்தட்ட சமமாக இருப்பதால் அது பேட்டிங் செய்கிறபோது அணிக்கு மிகவும் உதவியாக இருக்கும் என நம்பப்படுகிறது.
கான்வே
ருதுராஜ் கெயிக்வாட்
உத்தப்பா
மொயீன் அலி
ராயுடு
ஜடேஜா
தோனி
இவர்கள் ஏழு பேரும் தான் சிஎஸ்கேவின் முதல் ஏழு பேட்டர்களாக இருக்க அதிக வாய்ப்புள்ளது. பந்துவீச்சாளர்களாக பிராவோ/ஜார்டன், ஆடம் மில்ன், கே.எம். ஆசிஃப், ஷிவம் டுபே/ராஜ்வர்தன் ஹங்கர்கேக்கர் ஆகியோர் இருக்க வாய்ப்புண்டு.
மகளிர் உலகக் கோப்பை: மே.இ. தீவுகளை வீழ்த்தி இந்தியாவுக்கு நன்மை செய்த பாகிஸ்தான் அணி
வாழ்க்கையில் தோல்விகள் என்பதே இல்லை: இளம் வீரரை வாழ்த்திய சச்சின் டெண்டுல்கர்
பெங்களூரு ஆடுகளம்: நேர்மையுடன் மதிப்பீடு வழங்கிய ஐசிசி நடுவர் ஸ்ரீநாந்
தமிழ்ப் பெண்ணை மணந்தார் பிரபல கிரிக்கெட் வீரர் மேக்ஸ்வெல் (படங்கள்)