மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிராக ஒருநாள் தொடரில் விளையாடவுள்ள இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஷிகர் தவன் கேப்டனாகவும் ஜடேஜா துணை கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளார்கள்.
விராட் கோலி கேப்டன் பதவியிலிருந்து விலகியதையடுத்து இந்திய அணியில் கேப்டன்களின் எண்ணிக்கை மேலும் அதிகமாகியிருக்கிறது. ராகுல் டிராவிட் இந்திய அணியின் பயிற்சியாளராக நியமிக்கப்பட்ட பிறகு ஒவ்வொரு தொடரிலும் அவர் புதிய கேப்டனுடன் பணியாற்ற வேண்டிய சூழல் உருவாகியுள்ளது. இந்த வருடம் இந்திய அணியின் 8-வது கேப்டனாக உள்ளார் ஷிகர் தவன்.
கேப்டன்களின் எண்ணிக்கை அதிகமாகக் காரணம்?
கோலிக்கு அடுத்ததாக இந்திய டெஸ்ட், ஒருநாள், டி20 அணிகளின் கேப்டனாக ரோஹித் சர்மா நியமிக்கப்பட்டார். எனினும் ஓய்வு, காயம், கரோனா எனப் பல்வேறு காரணங்களால் ரோஹித் சர்மாவால் சில தொடர்களில் இடம்பெற முடியவில்லை. இதனால் ஒவ்வொரு முறையும் புதிய கேப்டன்களை நியமிக்க வேண்டிய கட்டாயம் பிசிசிஐக்கு ஏற்பட்டுள்ளது.
2022-ல் இந்திய அணியின் கேப்டன்கள்
விராட் கோலி - தெ.ஆ. டெஸ்ட்
கே.எல். ராகுல் - தெ.ஆ. ஒருநாள் தொடர்
ரோஹித் சர்மா - இலங்கை, மே.இ. தீவுகள் தொடர்கள்
ரிஷப் பந்த் - தெ.ஆ. டி20 தொடர்
பாண்டியா - அயர்லாந்து டி20 தொடர்
பும்ரா - இங்கிலாந்து டெஸ்ட்
தினேஷ் கார்த்திக் - இரு டி20 பயிற்சி ஆட்டங்கள்
ஷிகர் தவன் - மே.இ. ஒருநாள் தொடர்
இந்திய அணி அடுத்ததாக டெஸ்ட் தொடரில் எப்போது விளையாடப் போகிறது?
மே.இ. தீவுகள் ஒருநாள் தொடர்: புதிய கேப்டன் தலைமையில் இந்திய அணி அறிவிப்பு
பேட்டிங் தரவரிசைப் பட்டியலில்: பெரிய சரிவைச் சந்தித்த விராட் கோலி
இங்கிலாந்து அணியின் விஸ்வரூபத்துக்கு இவரே காரணம்: முன்னாள் கேப்டன் பாராட்டு
5-வது டெஸ்டில் அஸ்வின் ஏன் இல்லை?: டிராவிட் பதில்
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்: நெருக்கடியில் இந்திய அணி
தொடர் நாயகன் விருது: பும்ரா புதிய சாதனை