நேற்றைய டெஸ்ட் போட்டியில் ஜடேஜா, ரிஷப் பந்த் ஜோடி இணைந்து 6வது விக்கெட் பார்ட்னர்ஷிப்பில் 222 ரன்களை எடுத்து சச்சின்-அசாரூதின் சாதனையை சமன்செய்துள்ளனர்.
இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான கடைசி டெஸ்ட் போட்டி நேற்று (ஜூலை-1) தொடங்கியது. இதில் ரவீந்திர ஜடேஜா - ரிஷப் பந்த் இணைந்து 6வது விக்கெட் பார்னர்ஷிப்பில் 222 ரன்களை குவித்தனர். 98-5 என்ற மோசமான நிலையில் இருந்து இந்தியாவை வலுவான நிலைக்கு கொண்டு சென்றனர்.
ரிஷப் பந்த 111 பந்துகளில் 146 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். ஜடேஜா 163 பந்தில் 83 ரன்களுடன் களத்தில் இருக்கிறார்.
இதற்கு முன் இந்தியாவின் சார்பில் வெளிநாட்டில் 6வது விக்கெட்டில் அதிக ரன்களை எடுத்த ஜோடிகளின் பட்டியல்:
இதையும் படிக்க: 17 வருட தோனியின் சாதனையை முறியடித்த ரிஷப் பந்த்