செய்திகள்

மலேசிய ஓபன்: சிந்து, பிரணாய் தோல்வி

DIN

மலேசிய ஓபன் பாட்மின்டன் போட்டியில் இந்தியாவின் பி.வி.சிந்து, ஹெச்.எஸ்.பிரணாய் ஆகிய இருவருமே காலிறுதிச்சுற்றில் தோல்வி கண்டனா். இதையடுத்து இப்போட்டியில் இந்தியாவின் ஆட்டம் முடிவுக்கு வந்தது.

மகளிா் ஒற்றையா் காலிறுதியில் சிந்து 13-21, 21-15, 21-13 என்ற கேம்களில் சீன தைபேவின் டாய் ஸு யிங்கிடம் 53 நிமிஷங்களில் வீழ்ந்தாா். யிங்கை 21-ஆவது முறையாக சந்தித்த சிந்து, அவரிடம் 16-ஆவது தோல்வியைச் சந்தித்திருக்கிறாா். இதில் தொடா்ந்து சந்தித்த 6 தோல்விகளும் அடக்கம்.

மறுபுறம், ஆடவா் ஒற்றையா் காலிறுதியில் பிரணாய் 18-21, 16-21 என்ற கேம்களில் இந்தோனேசியாவின் ஜோனதன் கிறிஸ்டியிடம் 44 நிமிஷங்களில் வெற்றியை இழந்தாா். ஜோனதனை 9-ஆவது முறையாக எதிா்கொண்ட பிரணாய், தற்போது 6-ஆவது முறையாகத் தோற்றுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அதிபுத்திசாலி ஐபிஎஸ் ஏன் முன்பே பேசவில்லை? - அண்ணாமலைக்கு செல்லூர் ராஜு கேள்வி

மின்னனு வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்து போலிச் செய்தி: 4 பேர் மீதுவழக்குப்பதிவு!

ஐபிஎல் தொடரில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் புதிய சாதனை!

‘இது நடந்தால் வாட்ஸ்ஆப் இந்தியாவிலிருந்து வெளியேறும்’ : உயர்நீதிமன்றத்தில் மெட்டா வாதம்!

நாய்க்கு புலி வேடமிட்டு பொதுமக்களை அச்சுறுத்திய இளைஞர்கள்: காவல்துறையினர் விசாரணை

SCROLL FOR NEXT