மகளிர் கிரிக்கெட்டுக்கான 2022-25 காலக்கட்டத்துக்கான அட்டவணையை வெளியிட்டுள்ளது ஐசிசி.
இந்திய அணி இக்காலக்கட்டத்தில் (மே 2022 முதல் ஏப்ரல் 2025) 27 ஒருநாள், 36 டி20, 2 டெஸ்டுகளில் விளையாடவுள்ளது. இங்கிலாந்து (5), ஆஸ்திரேலியா (4), தென்னாப்பிரிக்கா (3) ஆகிய அணிகள் இந்தியாவை விடவும் அதிக டெஸ்டுகளில் விளையாடவுள்ளன.
இங்கிலாந்து, ஆஸ்திரேலியா ஆகிய இரு அணிகளும் இந்தியாவில் தலா 1 டெஸ்டை விளையாடவுள்ளன. இந்த அட்டவணையில் ஒவ்வொரு வருடத்திலும் மார்ச் முதல் மே வரை இடைவெளி அளிக்கப்பட்டுள்ளது. இந்த மாதங்களில் அனைத்து வீராங்கனைகளும் மகளிர் ஐபிஎல், ஹாங்காங்கின் டி20 போட்டிகளில் விளையாட வாய்ப்பு கிடைக்கும்.
எஃப்டிபி எனப்படும் கிரிக்கெட் அட்டவணை முதல்முறையாக மகளிர் கிரிக்கெட்டுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தக் காலக்கட்டத்தில் 7 டெஸ்டுகள், 159 டி20, 135 ஒருநாள் ஆட்டங்கள் நடைபெறவுள்ளன.
டி20 உலகக் கோப்பையில் விளையாட நினைத்தேன்...: ஓய்வு அறிவிப்பை வெளியிட்ட பிரபல கிரிக்கெட் வீரர்
ஜிம்பாப்வே ஒருநாள் தொடர்: வாஷிங்டன் சுந்தர் விலகல், புதிய வீரர் சேர்ப்பு!
பிசிசிஐ முன்னாள் தலைமை நிர்வாகி மறைவு
யு-17 மகளிர் உலகக் கோப்பை கால்பந்துப் போட்டி: வாய்ப்பை இழந்த இந்தியா
செஸ் போட்டி: முதல் சுற்றில் பிரக்ஞானந்தா வெற்றி