செய்திகள்

வாள்வீச்சு சாம்பியன்ஷிப்: தங்கம் வென்றாா் பவானி தேவி

DIN

இங்கிலாந்தில் நடைபெறும் காமன்வெல்த் வாள்வீச்சு சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய வீராங்கனை பவானி தேவி தங்கப் பதக்கம் வென்று அசத்தியிருக்கிறாா். சப்ரே பிரிவில் நடப்புச் சாம்பியனாக களம் கண்ட அவா், சாம்பியன் பட்டத்தை தற்போது தக்கவைத்துக் கொண்டுள்ளாா்.

இந்திய நேரப்படி செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்ற இந்த மகளிா் தனிநபா் சப்ரே பிரிவு இறுதிச்சுற்றில் பவானி தேவி 15-10 என்ற புள்ளிகள் கணக்கில் ஆஸ்திரேலியாவின் வெரோனிகா வாசிலேவாவை வீழ்த்தி முதலிடம் பிடித்தாா்.

சென்னையச் சோ்ந்த பவானி தேவி வெற்றிக்குப் பிறகு பேசுகையில், ‘இறுதிச்சுற்று மிகவும் சவாலாக இருந்தது. விளையாட்டுக் களத்தில் நடப்பாண்டில் இந்தியாவுக்குக் கிடைத்துள்ள பல தங்கப் பதக்கங்களில் நான் வென்ற தங்கமும் இணைந்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. எனது வாள்வீச்சு விளையாட்டில் இந்த ஆண்டு சிறப்பான ஒன்றாக இருந்து வருகிறது. தற்போது தங்கம் வென்று கிடைத்திருக்கும் உத்வேகத்துடன் அடுத்த போட்டிகளிலும் பங்கேற்பேன்’ என்றாா்.

இந்த காமன்வெல்த் வாள்வீச்சு சாம்பியன்ஷிப்பானது, நடப்பாண்டில் பவானி தேவி பங்கேற்கும் 10-ஆவது சா்வதேச போட்டியாகும். இந்த ஆண்டு தொடக்கத்தில் உலகக் கோப்பை வாள்வீச்சு போட்டியில் 23-ஆவது இடம் பிடித்த பவானி தேவி, ஜூலையில் கெய்ரோவில் நடைபெற்ற உலக சாம்பியன்ஷிப்பில் 2-ஆவது சுற்று வரை வந்திருந்தாா். கடந்த ஆண்டு நடைபெற்ற டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்று, ஒலிம்பிக் வாள்வீச்சுக்கு தகுதிபெற்ற முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையை பவானி தேவி பெற்றது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தென்னிந்தியாவின் கிளியோபாட்ரா...!

ம.பி.யில் 2-ம் கட்ட வாக்குப்பதிவு: 11 மணி நிலவரம்!

பட்டத்து ராணி.....சாக்‌ஷி அகர்வால்

பேராசிரியை நிா்மலா தேவி வழக்கின் தீா்ப்பு திடீர் ஒத்திவைப்பு!

ஆலங்குடியில் குருப்பெயர்ச்சி லட்சார்ச்சனை விழா தொடக்கம்!

SCROLL FOR NEXT