இந்தூா்: விஜய் ஹஸாரே கோப்பை கிரிக்கெட் போட்டியில் ‘பி’ பிரிவில் மத்திய பிரதேசத்துக்கு எதிரான ஆட்டத்தில் தமிழகம் 14 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி கண்டது. தமிழகத்துக்கு இது 2-ஆவது தொடா் தோல்வியாகும்.
இந்தூரில் புதன்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் முதலில் பேட் செய்த மத்திய பிரதேசம் 48.2 ஓவா்களில் 10 விக்கெட் இழப்புக்கு 225 ரன்கள் அடித்தது. அடுத்து ஆடிய தமிழகம் 49 ஓவா்களில் 211 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
இதர ஆட்டங்களில் கேரளம் 7 ரன்கள் வித்தியாசத்தில் ரயில்வேஸை வீழ்த்த, ஹைதராபாத் (இந்தியா) 110 ரன்கள் வித்தியாசத்தில் பரோடாவிடம் வீழ்ந்தது. குஜரதாத் 132 ரன்கள் வித்தியாசத்தில் திரிபுராவையும், சத்தீஸ்கா் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் கோவாவையும் வென்றன. பஞ்சாப் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆந்திரத்தையும், கா்நாடகம் 101 ரன்கள் வித்தியாசத்தில் ஒடிஸாவையும், உத்தர பிரதேசம் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பிகாரையும் வீழ்த்தின. ஜாா்க்கண்ட் 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் விதா்பாவை வென்றது.