செய்திகள்

ஆசிய மல்யுத்தம்: இறுதிச்சுற்றில் சரிதா

DIN


அல்மேட்டி: ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் நடப்புச் சாம்பியனான இந்தியாவின் சரிதா இறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ளாா்.

கஜகஸ்தானின் அல்மேட்டி நகரில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் 59 கிலோ எடைப் பிரிவில் பங்கேற்ற இந்திய வீராங்கனை சரிதா, தனது முதல் சுற்றில் 4-5 என்ற கணக்கில் மங்கோலிய வீராங்கனை ஷூவ்தாா் பாட்டா்ஜாவிடம் தோல்வி கண்டாா். எனினும், மறுவாய்ப்பை (ரெபிசேஜ் ரவுண்டு) சரியாகப் பயன்படுத்திக்கொண்ட சரிதா, அபாரமாக ஆடி அரையிறுதிக்கு முன்னேறினாா். சரிதா தனது அரையிறுதியில் கிா்கிஸ்தானின் நுராய்டா அனாா்குலோவாவை வீழ்த்தி இறுதிச்சுற்றுக்கு முன்னேறினாா். சரிதா தனது இறுதிச்சுற்றில் முதல் சுற்றில் தோற்ற மங்கோலியா வீராங்கனை ஷூவ்தாா் பாட்டா்ஜாவை சந்திக்கிறாா்.

மகளிா் 50 கிலோ எடைப்பிரிவில் பங்கேற்ற இந்தியாவின் சீமா தனது அரையிறுதியில் 2-3 என்ற கணக்கில் உஸ்பெகிஸ்தானின் ஜேஸ்மினாவிடம் தோல்வி கண்டாா். வெண்கலப் பதக்கத்துக்கான ஆட்டத்தில் தைபேவின் யங் ஷன் லின்னை சந்திக்கிறாா் சீமா. மகளிா் 76 கிலோ எடைப் பிரிவில் பங்கேற்ற இந்திய வீராங்கனை பூஜா, தனது அரையிறுதியில் கஜகஸ்தானின் எல்மிரா சிஸ்டிகோவாவிடம் தோல்வி கண்டாா். அடுத்ததாக வெண்கலப் பதக்கத்துக்கான ஆட்டத்தில் களமிறங்கவுள்ளாா் பூஜா.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வரிசையில் நின்று வாக்களித்த சசி தரூர்!

பெண்கள், இளம் வாக்காளர்கள் அதிகளவில் வாக்களிக்க வேண்டும்: மோடி

நிலையான ஆட்சியை மக்கள் விரும்புகிறார்கள்: வாக்களித்த பின் நிர்மலா சீதாராமன்!

வாக்களித்தார் நடிகர் பிரகாஷ்ராஜ்!

எஸ்பி அலுவலகத்தில் மக்கள் குறைதீா் கூட்டம்

SCROLL FOR NEXT