பிபிஎல் டி20 போட்டியில் ஒவ்வொரு அணியும் மூன்று வெளிநாட்டு வீரர்களைச் சேர்த்துக்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
10-வது பிபிஎல் டி20 போட்டி, டிசம்பர் 3 முதல் நடைபெறவுள்ளது.
பிபிஎல் டி20 போட்டியில் பங்கேற்கும் 10 அணிகளும் இனிமேல் ஆட்டத்தின்போது மூன்று வெளிநாட்டு வீரர்களைச் சேர்த்துக்கொள்ளலாம். இதன்மூலம் ஒவ்வொரு அணியும் 19 வீரர்களைத் தேர்வு செய்துகொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதையடுத்து பெர்த் அணி இங்கிலாந்து தொடக்க வீரர் ஜேசன் ராயைத் தேர்வு செய்துள்ளது.
பிபிஎல் போட்டியில் இந்திய வீரர்களைச் சேர்க்கும் முயற்சிகளும் நடைபெற்று வருகின்றன. எனினும் இதுவரை பிசிசிஐ இதற்குச் சம்மதம் தெரிவிக்கவில்லை.