செய்திகள்

இரு வங்காள கிரிக்கெட் வீரர்களுக்கு கரோனா

DIN

வங்காள வேகப்பந்து வீச்சாளர் முகேஷ் குமார், இடது கை சுழற்பந்து வீச்சாளர் ஷ்ரேயன் சக்ரவர்த்தி ஆகிய இருவரும் கரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

கிரிக்கெட் முகாமை நடத்துவதற்காக 21 மூத்த வங்காள வீரர்கள், 16 மகளிர் வீராங்கனைகள் உள்பட 63 பேருக்கு கரோனா பரிசோதனை நடத்தியுள்ளது வங்காள கிரிக்கெட் சங்கம். இதில் முகேஷ் குமார், ஷ்ரேயன் ஆகிய இருவருக்கும் கரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் கிரிக்கெட் முகாம் நடைபெறுகிறது. இதில் பங்கேற்கும் கிரிக்கெட் வீரர்கள், பயிற்சியாளர்கள், ஊழியர்கள், பாதுகாவலர்கள் என அனைவருக்கும் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. கரோனா பாதுகாப்பு வழிமுறைகளைப் பின்பற்றி பயிற்சிகளை மேற்கொள்ளவிருப்பதாக வங்காள கிரிக்கெட் சங்கம் கூறியுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நான் முழுமையான படைப்பாளி இல்லை: மனம் திறந்து பேசிய இயக்குநர் ஹரி!

புதுச்சேரியில் ஏப்.29 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை!

சேலையில் ஜொலிக்கும் கெளரி!

அடுத்த 5 நாள்களுக்கு 42 டிகிரி வரை வெயில் அதிகரிக்கும்!

மேல்நிலை நீா்த்தேக்க தொட்டியில் மாட்டுச் சாணம் கலப்பு: மக்கள் அதிா்ச்சி

SCROLL FOR NEXT