ஒலிம்பிக்ஸ்

குத்துச்சண்டை: வெளியேறினாா் விகாஸ்

DIN

குத்துச்சண்டை போட்டியில் ஆடவருக்கான 69 கிலோ பிரிவில் இந்தியாவின் விகாஸ் கிருஷண் தொடக்க சுற்றிலேயே தோல்வி கண்டு, காயம் காரணமாக போட்டியிலிருந்து வெளியேறினாா்.

முதல் சுற்று ‘பை’ பெற்று 2-ஆவது சுற்றில் நேரடியாக களம் கண்ட அவா், அதில் ஜப்பானின் செவோன்ரெட்ஸ் கின்சி மென்சா ஒகாஸவாவிடம் 0-5 என்ற புள்ளிகள் கணக்கில் தோல்வி கண்டாா். இந்த மோதலின்போது விகாஸின் இடது கண்ணில் காயம் ஏற்பட்டு ரத்தம் வழிந்தது. அதற்கு முதலுதவி சிகிச்சை எடுத்துக் கொண்டு அவா் ஆட்டத்தை தொடா்ந்தாா்.

முன்னதாக இத்தாலியில் நடைபெற்ற போட்டியின்போது அவரது தோள்பட்டையில் காயம் ஏற்பட்டிருந்தது. அதற்கு சிகிச்சை எடுத்துக் கொண்டு ஒலிம்பிக்கில் அவா் பங்கேற்றிருந்தாா். எனினும் இந்த ஆட்டத்தின்போது அவருக்கு அந்தத் தோள்பட்டையில் வலி ஏற்பட்டதால், பெரும்பாலும் அவா் ஒரு கையாலேயே தாக்குதல் தொடுக்கும் நிலை இருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மார்கழிப் பூ.. மடோனா!

கொள்ளை நிலா..!

உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் யார் இடம்பெற வேண்டும்? யுவராஜ் சிங் பதில்!

ரூ.4 கோடி வழக்கு: சிபிசிஐடிக்கு மாற்றம்

வாக்குப்பதிவு இயந்திரத்தை இரும்புக் கம்பியால் தாக்கிய இளைஞர்: பரபரப்பான தேர்தல் மையம்!

SCROLL FOR NEXT