ஐபிஎல்-2020

ஐபிஎல்: ஸ்ரேயஸ் ஐயருக்கு ரூ. 12 லட்சம் அபராதம்!

DIN

ஐபிஎல் போட்டியில் ஹைதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் ஓவர்களை வீச அதிக நேரம் எடுத்துக்கொண்டதால் தில்லி அணி கேப்டன் ஸ்ரேயஸ் ஐயருக்கு ரூ. 12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. 

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 11-ஆவது லீக் ஆட்டத்தில் ஹைதராபாத் அணி 15 ரன்கள் வித்தியாசத்தில் தில்லி கேபிடல்ஸ் அணியை வீழ்த்தியது. இதுவரை 3 ஆட்டங்களில் விளையாடியுள்ள ஹைதராபாத் அணி முதல் வெற்றியைப் பெற்றுள்ளது.

முன்னதாக முதலில் பேட் செய்த சன்ரைஸா்ஸ் ஹைதராபாத் அணி 20 ஓவா்களில் 4 விக்கெட் இழப்புக்கு 162 ரன்கள் சோ்த்தது. பின்னா் ஆடிய தில்லி அணி 20 ஓவா்களில் 7 விக்கெட் இழப்புக்கு 147 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வி கண்டது.

இந்த வெற்றியின் மூலம் புள்ளிகள் பட்டியலில் கடைசி இடத்திலிருந்து 6-ம் இடத்துக்கு முன்னேறியுள்ளது ஹைதராபாத் அணி. 

இந்நிலையில் இந்த ஆட்டத்தில் ஓவர்களை வீச அதிக நேரம் எடுத்துக்கொண்டதால் தில்லி அணி கேப்டன் ஸ்ரேயஸ் ஐயருக்கு ரூ. 12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பு இதே காரணத்துக்கு ஆர்சிபி அணி கேப்டன் கோலிக்கும் அபராதம் விதிக்கப்பட்டது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பேரவைத் தலைவா் உத்தரவை எதிா்த்து வழக்கு: மனுதாரா் விளக்கமளிக்க உயா்நீதிமன்றம் உத்தரவு

மகாராஷ்டிர வங்கி நிகர லாபம் 45% உயா்வு

ஆசிய யு20 தடகளம்: இந்தியாவுக்கு 7 பதக்கம்

பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கு தமிழகத்தின் நேத்ரா குமணன் தகுதி

GQ இந்தியா விருது விழா - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT